இந்தியாவில் புலிகளை அனுமதிக்க வாழப்பாடியும் எதிர்ப்பு
சென்னை:
இந்தியாவில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான நார்வே நாட்டு தூதுக்குழு நடத்தும் பேச்சவார்த்தையை, இந்தியாவில் நடத்த மத்தியஅரசு உதவ வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் வாழப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பந்தப்பட்ட கொலை வழக்கில், விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரன் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு இந்திய தடை விதித்துள்ளது. எனவே விடுதலைப்புலிகளைபேச்சுவார்த்தைக்கு அனுமதித்தால் அவர்கள் திரும்பவும் இந்தியாவில் காலூன்றி விடுவார்கள்.
அதனால் மத்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்களைபேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
புதுவை காங்கிரசும் எதிர்ப்பு:
இந்நிலையில் இந்தியாவில் வைத்து விடுதலைப் புலிகளை அனுமதிக்கக் கூடாது என்று பாண்டிச்சேரி காங்கிரசும்கூறியுள்ளது.
சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அனுமதித்தால், மீண்டும் விடுதலைப் புலிகள் தமிழகத்தில்ஊடுருவ அவர்கள் இடம் கொடுத்தது போல் ஆகிவிடும் என்றார் பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் வி.நாராயணசாமி.
மேலும் இந்தியாவில் வைத்து இந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாதுஎன்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications