தமிழக பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும்: தம்பிதுரை
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியற் கல்லூரிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்று கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
அனைத்து சுயநிதிக் கல்லூரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டதம்பிதுரை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியற் கல்லூரிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். இதற்கான உத்தரவை மத்திய அரசு முன்பே பிறப்பித்திருந்தது.
இதற்கான ஒப்புதலில் கையொப்பம் இட்டு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், டிசம்பர் மாத இறுதியில் அனுப்பினார்.இதன்படி அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்படும்.
இனி தேர்வு எழுதும் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின்சான்றிதழே வழங்கப்படும்.
விரைவில் அமைச்சரவை கூடி கல்விப் பாடத்திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் செய்ய உள்ளோம். இதனால்மாணவர்களின் படிப்பு திறன் அதிகரிக்கும் என்று தம்பிதுரை கூறினார்.












Click it and Unblock the Notifications