For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றத்தைத்தணிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் அடுத்த வாரம் இந்தியாவுக்குவருகிறார்.

இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியை நேற்று இரவு சந்தித்த பாவெல், தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான்தன்னுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தியா 20 தீவிரவாதிகளின் பட்டியலைக் கொடுத்த பிறகும் பாகிஸ்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்இருப்பது நல்லதல்ல என்றும் பாவெல் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் மேற்கொள்ளவுள்ள பயணம் அவ்விரு நாடுகளுக்கிடையே அமைதியைஏற்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பாவெல்.

அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் அதை உலகம்தாங்கிக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா பெரிதும் அஞ்சி வருகிறது.

பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இரு நாடுகளையும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றன.

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இவ்வாரத் துவக்கத்தில்தான் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயையும்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் சந்தித்து விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X