போருக்கு நாங்கள் தயார்: ராணுவ தளபதி பத்மநாபன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தானைத் தாக்குவதற்கு முழு அளவில் தயாராக உள்ளோம் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
ஆனால் மத்திய அரசுதான் இது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜெனரல் பத்மநாபன் கூறினார்.
எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம், அந்த நிலையையும் தாண்டி மிகவும் மோசமடைந்து விட்டது என்றபத்மநாபன், இந்திய ராணுவம் எந்த ஒரு போரையும் சந்திப்பதற்கு முழு அளவில் தயாராக உள்ளது என்றார்.
கடந்த 1965ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போருக்கு இணையான சூழ்நிலையே இப்போதும் நிலவியுள்ளதுஎன்றும் பத்மநாபன் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்தி வரும் "ப்ராக்ஸி வார்"தான் இப்போதையமோசமான சூழ்நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications