பொங்கல் லோனும் இல்லை: அரசு ஊழியர்கள் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாங்க் மூலம் பொங்கலுக்கு முன் பணம் வழங்கப்படும் திட்டத்தில் குழப்பம் நிலவியதை அடுத்து அரசு ஊழியர்கள்அதிருப்தியடைந்துள்ளனர்.

கஜானா காலியாகி உள்ளது என்று கூறி, அரசு ஊழியர்களின் தீபாவளி போனஸ் மற்றும் பொங்கல் அட்வான்சில்கை வைத்த தமிழக அரசு, அதிரடியாக விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளையும் அறிவித்தது.

போனஸ், அட்வான்சுக்குப் பதிலாக வங்கிகள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 கடன் வழங்க ஏற்பாடுசெய்வதாக அரசு கூறியிருந்தது.

அரசு ஊழியர்கள் நேரடியாக அந்த வங்கிகளுக்குச் சென்று படிவத்தை நிரப்பி கடன் தொகையை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ படிவம் இன்னும்ரெடியாகவில்லை.

எத்தனை பேருக்கு கடன் வழங்கலாம் என்று எங்கள் தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்தால் தான் படிவத்தை தரமுடியும் என்று வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் பொங்கலும் (திங்கள்கிழமை) வந்து விட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள்தான் வேலை நாள்.இன்று வரை படிவம் வரவில்லை என்று வங்கிகள் கூறியுள்ளன.

போனஸ் தொகையைப் பறிகொடுத்து, அட்வான்சும் கிடைக்காத அரசு ஊழியர்கள், கடனாவது கிடைக்கும் என்றுஎதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அந்தக் கடனும் கிடைக்காததால் கவலையடைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு மேல் கடும்அதிருப்தியிலும் உள்ளனர் அரசு ஊழியர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+