இந்திய ராணுவத்துக்கு 30ம் தேதி முதல் ஆட்கள் தேர்வு
சென்னை:
ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுக்கும் பணி இந்த மாதம் 30ம் தேதி முதல் சென்னையில்துவங்குகிறது.
ராணுவத்தின் பொதுப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு ஆள் சேர்க்கும் பணி வரும் 30ம் தேதிசென்னையில் துவங்குகிறது. சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தில் இதற்காகதேர்வுகள் நடக்கிறது. இத தேர்வுகள் பிப்ரவரி 5ம் தேதி வரை நடக்கும்.
ஜனவரி மாதம் 30ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், 31ம் தேதி விழுப்புரம், கடலூர், மற்றும் பாண்டிச்சேரி,பிப்ரவரி 1ம் தேதி குடியாத்தம், வாணியம்பாடி, ஆற்காடு, அரக்கோணம், வேலூர் தாலுகாக்களைச் சேர்ந்தஇளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 2ம் தேதி வேலூரில் உள்ள மற்ற தாலுகாக்களும், பிப்ரவரி 3ம் தேதி தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டம், 4ம்தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
தேர்வில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வும், அதில் தேறியவர்களுக்கு மருத்துவ தேர்வுகள்உட்பட பல தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.
இதே பேல் இந்திய விமானப்படையில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான தேர்வுகள் வரும் ஆகஸ்ட்மாதம் பெங்களூர், கொச்சி உள்ளிட்ட ஏழு நகரங்களில் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள தகுதியுள்ளவர்கள் சென்னை தாம்பரம் விமானப் படை ஆள் சேர்ப்பு அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications