இன்று இரவு தொலைக்காட்சியில் பேசுகிறார் முஷாரப்
டெல்லி:
எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தன் நாட்டு மக்களுக்குஇன்று (சனிக்கிழமை) இரவு உரையாற்றுகிறார்.
தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவது பற்றி முஷாரப்பின் இந்த உரையே போர் வருமா இல்லையா என்பது பற்றித்தெளிவாகக் கூறிவிடும்.
சர்வதேசத் தீவிரவாதத்தைத் தடை செய்வது தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் 1377வது தீர்மானத்துக்குபாகிஸ்தான் முழு ஆதரவு அளிப்பது குறித்தும் அவ்வுரையில் முஷாரப் குறிப்பிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. உறுப்பு நாடுகள் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதையோ நிதியுதவி செய்வதையோ இந்தத் தீர்மானம்தான்தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப்பின் உரையை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்காலின் பாவெல் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் விதமாகவே முஷாரப்பின் உரை இருக்கும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications