For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் தர மறுத்த தம்பதி சுட்டுக் கொலை: ராணுவ வீரர் வெறிச் செயல்

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

தேனி அருகே தனக்குப் பெண் தர மறுத்த தம்பதியரை ஒரு ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார். இச்சம்பவத்தில்மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஊட்டியில் உள்ள வெலிங்கடன் ராணுவ முகாமில் ஹவில்தாராக உள்ளார் விஜய் காண்டீபன். இவர் சொந்த ஊர்தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம்.

இதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மகளைத் தனக்கு மணம் முடிக்க கேட்டு அவர்கள் வீட்டுக்குச்சென்றார் விஜய். ஆனால் தன் பெண்ணை விஜய்க்குத் தர சீனிவாசன் மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய் தன் கையில் வைத்திருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் அந்த வீட்டில் இருந்த அனைவரையும்சரமாரியாகச் சுட்டார்.

இதில் சீனிவாசனும் அவருடைய மனைவி சந்திராவும் குண்டடி பட்டு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்இறந்தனர்.

இச்சம்பவத்தில் ஜெயசுதா மற்றும் அவரது தங்கை ஜெயப்ரியா ஆகியோருக்கு கழுத்து, காலில் குண்டடி பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டின்போது சீனிவாசனின் எதிர் வீட்டிலிருந்த பெரியசாமி, அவரது மனைவி மற்றும் தெருவில்சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஆகியோர் மீதும் குண்டுகள் பாய்ந்தன.

காயமடைந்த 5 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரதுஉடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசார் விஜய் காண்டீபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதிமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X