குண்டு வீச்சிலிருந்து ரிக்ஷா மூலம் தப்பிய ஒமர்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்க குண்டு வீச்சின்போது தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் ஒரு சாதாரண ரிக்ஷா மூலம் தப்பினார்என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காந்தகாரில் அக்டோபர் 7ம் தேதி அமெரிக்க விமானப்படைகள் சரமாரியாக குண்டுகள் வீசின.
அப்போது தன் வீட்டில்தான் முல்லா ஒமர் இருந்தார். அங்கிருந்து ரிக்ஷா மூலம் தப்பித்து காண்டஹாரின் மத்தியப்பகுதிக்குச் சென்றார்.
அங்கிருந்து டிரக் மூலம் தப்பிச் சென்றார். பிறகு ஒவ்வொரு வீடாக மறைந்து வாழ்ந்தார். அவருடன் அவரதுஆதரவாளர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
அவர் அப்போது 6 பீரங்கிகளையும் அமெரிக்கப் படைகள் மீது சுடச் சொன்னார். ஆனால் அமெரிக்க குண்டுவீச்சினால் அந்த 6 பீரங்கிகளும் அழிந்து விட்டன என்று சாகேப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications