ராஜகோபாலன் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை (கறுப்புப் பூனை) ஜ.ஜி.யாக சில மாதங்களுக்கு முன்நியமிக்கப்பட்ட ராஜகோபாலன், மீண்டும் தமிழகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின், அதில் சம்பந்தப்பட்ட மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுடன் கேட்டுக் கொண்டது.
ஆனால் மத்திய அரசு கேட்ட அதிகாரிகளை விடுத்து, போலீஸ் பயிற்சிப்பள்ளி முதல்வராக இருந்தராஜகோபாலனை தமிழக அரசு டெல்லி பணிக்கு அனுப்பியது. டெல்லியில் அவர் தேசிய பாதுகாபபுப் படையின்ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தேசிய பாதுகாப்புப் படையின் கூடுதல் பொறுப்பை கவனிக்கும்படி இந்திய-திபெத்திய எல்லைபாதுகாப்புப் படை போலீஸ் டி.ஜி.பி. சவுடேவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகோபாலன் தன் சொந்த விருப்பத்தின் காரணமாக தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குதமிழக அரசு என்ன பணி வழங்க இருக்கிறது என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications