போலி வாக்காளர் சேர்ப்பு புகாரே பொய் என்கிறது அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிமுகவினர் போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ளதாக திமுகவினர்கூறும் குற்றச்சாட்டு பொய்யானவை என்பது தேர்தல் கமிஷனர் நடத்திய விசாரணையில் இருந்து தெரிகிறது என்றுஅதிமுக எம்.பி. மலைச்சாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மலைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் கமிஷன் செயலாளர் கே.ஜே. ராவ் கடந்த 10ம் தேதி சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதியில்ஆய்வு நடத்தினார். ராவ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது அதிமுக, திமுகவினருக்கிடையே கடுமையானவாக்குவாதம் நிலவியது.

எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ராவ் சென்று விசாரித்தார். அப்பகுதியில் போலி வாக்காளர்கள்சேர்க்கப்படவில்லை எனவும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு குறிப்பிட்ட எந்த மனுக்களிலும் அவர்கள்கையொப்பமிடவில்லை என்று அங்கு குடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஒரு சில பகுதிகளில் அதிமுகவினர் எந்த தவறும் செய்யவில்லை என்பதும், சில பகுதிகளில்கணக்கெடுப்புப் பணியே மேற்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் திமுகவினரால் அதிமுகவினருக்கு எதிராக சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய்யானவைஎன்று அறிய முடிகிறது என்று மலைச்சாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+