காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: ராணுவ வீரர் உள்பட 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவுகளில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உள்பட 5 பேர் இறந்தனர்.

இப்போது கடுமையான பனி நிலவுவதால் காஷ்மீரின் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இங்குகுப்வாரா மாவட்டத்தில் உள்ள நெளகாம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ வீரர் இறந்தார்.

மேலும் 3 ராணுவ வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காப்பாற்றப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காஷ்மீரில் போனியார் மாவட்டத்தில் செல்லார் போஸ்ட்அருகில் பனிச்சரிவில் சிக்கி 4 போர்ட்டர்கள் உயரிழந்தனர்.

ஆனால் இங்கு கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை.பனிச்சரிவினால் இந்தப் பகுதியில் 4 அடி வரை பனி மூடியுள்ளது.

மேலும் பனிச்சரிவு காரணமாக பாரமுல்லா-யூரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தோடா மலைச் சரிவு உள்பட பல பகுதிகளிலும் 2500 மீட்டர் தூரத்திற்கு பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்நிலையம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+