காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: ராணுவ வீரர் உள்பட 5 பேர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவுகளில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உள்பட 5 பேர் இறந்தனர்.
மேலும் 3 ராணுவ வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காப்பாற்றப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காஷ்மீரில் போனியார் மாவட்டத்தில் செல்லார் போஸ்ட்அருகில் பனிச்சரிவில் சிக்கி 4 போர்ட்டர்கள் உயரிழந்தனர்.
ஆனால் இங்கு கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை.பனிச்சரிவினால் இந்தப் பகுதியில் 4 அடி வரை பனி மூடியுள்ளது.
மேலும் பனிச்சரிவு காரணமாக பாரமுல்லா-யூரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தோடா மலைச் சரிவு உள்பட பல பகுதிகளிலும் 2500 மீட்டர் தூரத்திற்கு பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்நிலையம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.