அமெரிக்காவில் பெர்னாண்டஸ்
வாஷிங்டன்:
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்று சேர்ந்தார்.
தற்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்ற நிலை குறித்தும் பெர்னாண்டஸ் அமெரிக்கதலைவர்களிடம் விவாதிக்கவுள்ளார்.
இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பட்டியல் ஏற்கனவே அமெரிக்காவிடம்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதைய பயணத்தில் அதுகுறித்து எதுவும் பேசப் போவதில்லை என்றுபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
பெர்னாண்டசுடன் 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவும் அமெரிக்கா சென்றுள்ளது.
தன்னுடைய 6 நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அத்வானி சமீபத்தில்தான்இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாண்டஸ் தன் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும்போது வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கும் அமெரிக்கா செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.