எந்தத் தாக்குதலுக்கும் இந்தியக் கடற்படை தயார்
டெல்லி:
பாகிஸ்தானை தாக்க இந்திய கடற்படை தயார் நிலையில் இருப்பதாக இந்திய கடற்படைத் தளபதியாகப்பொறுப்பேற்றுக் கொண்ட சீப்-அட்மிரல் மாத்வேந்திர சிங் கூறினார்.
வட அரேபியக் கடல் பகுதியில் இருந்து எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதை முறியடிக்க இந்திய கடற்படைத் தயார்நிலையில் உள்ளது. நம்மிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், அதை முதலில் பயன்படுத்த மாட்டோம்.
நம் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால் நிச்சயம் பதிலுக்கு நமது முப்படைகளும் அணு ஆயுதங்களால் தாக்குதல்நடத்தும். அதில் சந்தேகமே வேண்டாம். அரபிக் கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் இருப்பதால் நமக்குபிரச்சனை ஏதும் இல்லை. பாகிஸ்தானுடன் மோதல் வந்தால் இந்த அமெரிக்கக் கப்பல்களால் இந்தியாவுக்கு சிரமம்நேரும் என்று சொல்வதில் அர்த்தமேயில்லை.
சீன உதவியுடன் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் புதிய கடற்படைத் தளம் அமைப்பது இந்திய கடற்படைக்கு எந்தபிரச்சனையும் இல்லை. கடல் ரொம்பப் பெரிசு. அவர்கள் தளம் அமைத்தால் நாமும் அமைப்போம்.
அரசின் உத்தரவுப்படி முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து போர் கப்பல்களும் ஆயுதங்கள்பொறுத்தப்பட்டு தாக்குதல் நிலைக்கு வந்துவிட்டன.
இந்தியக் கப்பல்களுக்கு ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகளை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது என்றார்.
இப்போது இந்திய கடற்படைக் கப்பல்களில் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கமறுத்துவிட்டார் சிங்.












Click it and Unblock the Notifications