ஆண்டிப்பட்டி தேர்தல்: யாரையோ திருப்திப் படுத்த முயற்சி - இளங்கோவன்
சென்னை:
யாரையோ திருப்திப் படுத்துவதற்காகவே ஆண்டிப்பட்டியில் மட்டும் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் மற்ற இரு தொகுதிகளை விட அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்காளர்பட்டியலை சரிபார்க்கச் சென்ற அதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆண்டிப்பட்டி தொகுதியிலும்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தேர்தல் கமிஷனுக்கு நான் தந்தி மூலம் மனுஅனுப்பியுள்ளேன். இவ்விஷயத்தில் அரசியல் அரசியல் பின்னணி ஏதோ இருக்கிறது. யாரையோதிருப்திப்படுத்தவே இப்படி செய்துள்ளனர்.
தேர்தலை தள்ளி வைக்கக் கோரி பல்வேறு கட்சிகள் முறையிட்டுள்ளன. தேர்தல் கமிஷன் முடிவைப் பொறுத்துஎங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கொடுத்த மனுக்கள் மீது தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் முடிவுக்குப் பிறகுதான்,ஆண்டிப்பட்டி தொகுதியில் தனித்து போட்டியிடுவதா, அல்லது பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பதுகுறித்து மற்ற கட்சிகளுடன் பேசி முடிவு அறிவிக்கப்படும் என்று இளங்கோவன் கூறினார்.