உவரி படகு விபத்து: பலி 6 ஆக உயர்வு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கடலில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
மாட்டுப்பொங்கல் அன்று திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைப் பகுதி மக்கள் உவரிக்கு சுற்றுலா சென்றனர்.அங்கு கடலில் படகில் சென்ற போது, ராட்சத அலையால் படகு மூழ்கியது.
அதில் பயணம் செய்த 17 பேர் மற்றும் படகு ஓட்டுபவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கினர். இதனால் படகில் சென்றசுதீஜாபீவி (55), சுந்தரி (13) ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர்.
மேலும் உவரியில் உள்ள ரத்தினசபாபதி (8) என்ற சிறுவனின் உடல் நேற்று (புதன்கிழமை) காலையில் உவரியில்கரை ஒதுங்கியது. நேற்று மாலை மீனவர்களின் முயற்சியால் இன்னொரு சடலமும் கிடைத்தது. ஆனால் இவரதுஅடையாளம் தெரியவில்லை.
இந்நிலையில் திசையன்விளையைச் சேர்ந்த செல்வம் (18), ஜவகர் அலி (18) ஆகியோரின் உடல்களும் நேற்றுமாலை கரை ஒதுங்கின.
இதையடுத்து இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications