ராமேஸ்வரம் அருகே பிடிப்பட்ட 30 அடி நீள ராட்சத மீன்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

பாம்பன் அருகே கடலில் கப்பல்களை கவிழ்க்க கூடிய சக்தி வாய்ந்த 30 அடி நீளமுள்ள ராட்சத மீன் பிடிப்பட்டது.

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து, சூசைராயப்பனுக்கு சொந்தமான விசைப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தென் நடுக்கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் வீசிய வலையில் திமிங்கலம் போன்ற ராட்சத மீன் சிக்கியது. அந்த வலையை வெளியேஇழுக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டே தெற்குவாடி கடற்கரைக்கு வந்தனர்.

உயிருடன் இருந்த அந்த ராட்சத மீனை 30க்கும் மேற்பட்டவர்கள் இழுக்க முடியாமல் இழுத்துக் கரைக்கு கொண்டுவந்தனர். அந்த மீன் 30 அடி நீளமும் 6 அடி அகலமும் இருந்தது. அதன் எடை 3 டன் இருந்தது. அந்த மீன்திருவாலியான் கொடுபிடி பிலால் எனற வகையைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்த மீன் பெரிய கப்பல்களையும் கவிழ்க்கும் ஆற்றல் மிகுந்தது. இது உணவுக்கு உதவாது. உரத்துக்குத்தான்பயன்படும். இந்த மீனின் ஈரல் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.

இந்த ராட்சத மீனை அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பிறகுமீனவர்கள் அந்த மீனை வெட்டி உரத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+