For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற 150 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீசார் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு உடனே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றுகோரி சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற 150 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் சட்டக் கல்லூரி விடுதிக்குள் புகுந்து போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக 50க்கும்மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து, மாணவர்கள் பெரும் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு நபல் கமிஷனை அமைத்த தமிழக அரசு,காயமடைந்த மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

ஆனால் இன்னும் அந்த நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர்.

சென்னை பாரிமுனையிலிருந்து கோட்டை வரை ஊர்வலம் செல்வது என்று முடிவு செய்த 150 சட்டக் கல்லூரிமாணவர்கள் ஊர்வலமாகக் கிளம்பினர்.

ஆனல் ஊர்வலம் செல்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஊர்வலமாக வந்த மாணவர்களை சட்டக்கல்லூரி அருகிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்த 150 சட்டக் கல்லூரி மாணவர்களையும் கைது செய்த போலீசார், கொண்டித் தோப்பில் உள்ளசமுதாயக் கூடத்தில் சென்று வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X