For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா மீது முஷாரப் மீண்டும் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்கு வேறுயாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் மதவாதத் தலைவர்களுடன் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதம் நடத்தினார்.

அந்தத் தலைவர்களிடம் அவர் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று எனக்குத்தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து அதை என்னிடமே விடுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்றுஅவர்களைக் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானில் சுமார் 2,000 தீவிரவாதிகள் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் வேறு யார் (இந்தியா) கூறியதற்காகவும் நான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள்நாட்டுக்காகவும் எங்கள் மக்களின் நன்மைக்காகவுமே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றும் முஷாரப்கூறினார்.

இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய முஷாரப், எங்கள்படைகளும் எதற்கும் தயாராகவே உள்ளன என்றார்.

எங்கள் மீது வலுக்கட்டாயமாகப் போர் திணிக்கப்படுகிறது. ஆனால் நாங்களும் எங்கள் முழுப் பலத்தையும்காண்பிப்போம் என்று கோபத்துடன் பேசினார் முஷாரப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X