For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜகோபாலன் தமிழகத்திற்குத் திரும்பியது ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசுப் பணியிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட டிஜிபி ராஜகோபாலன், தமிழக சீருடைப் பணியாளர்தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருமைமிக்க தேசிய பாதுகாப்புப் படைத் தலைவராக இருந்து வந்த ராஜகோபாலன் தற்போது சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சொந்தக் காரணங்களுக்காக தன்னை மீண்டும் தமிழக அரசுப் பணிக்கே மாற்றுமாறு மத்திய உள்துறைஅமைச்சகத்திற்கு ராஜகோபாலன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையேற்று ராஜகோபாலன் மீண்டும்தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார்.

தமிழக பணிக்குத் திரும்பிய அவரை தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக மாநில உள்துறைநியமித்துள்ளது. இந்தப் பணியை இதுவரை கூடுதல் டிஜிபியான கோவிந்த் கூடுதல் பணியாக கவனித்து வந்தார்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக டிஜிபியாக ராஜகோபாலன் இருந்தார். ஆனால் ஜெயலலிதாபதவிக்கு வந்ததும், ராஜகோபாலனை சாதாரண போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக மாற்றி விட்டு, அவரை விடசீனியரான ரவீந்திரநாத்தை டிஜிபியாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய திமுக ஆட்சியின்போது சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டிஜிபியாக இருந்த ஒரு அதிகாரிதான் ஜெயலலிதாவைக்கைது செய்தவர். அவர்தான் தற்போது அடுத்த டிஜிபியாக பதவி உயர்வு பெறுவதற்குத் தயாராக உள்ளார்.

ஆனால் அந்த அதிகாரியை டிஜிபியாக நியமிப்பதற்கு ஜெயலலிதா வட்டாரம் தயாராக இல்லை. அதனால் அவரைவிட சீனியரான ராஜகோபாலனையே மீண்டும் சென்னைக்குக் கொண்டுவர தமிழக அரசு முயற்சித்ததாகவும், அதன்விளைவாகத்தான் அவர் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கறுப்புப் பூனைப் படைத் தளபதியாக ராஜகோபாலன் இருந்தாலும், அவர் பெரும்பாலும் டெல்லியிலேயேஇருக்காமல், அடிக்கடி சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அவரை தமிழகத்திற்கேமத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X