அம்பேத்கர் சிலை உடைப்பு: ஒருவர் கைது
பெரம்பலூர்:
சென்னையை அடுத்த பெரம்பலூரில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அம்பேத்கர் சிலை ஒன்றை பாமக நிறுவியிருந்தது. அந்த சிலைக்குப் பக்கத்திலேயேபாமக கொடிக் கம்பமும் இருந்தது.
வியாழக்கிழமை நள்ளிரவில் இந்த சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டன.
வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
உடனடி விசாரணையும் ஆரம்பமானது. தகவல் அறிந்த காவல் துறைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தவிசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய அரநரை கிராமத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இவர் வாரஇதழ் ஒன்றின் நிருபராக இருந்த செல்வராஜ் கொலை வழக்கிலும் தொடர்புடையவர். இந்த சிலையின் பீடத்தில் செல்வராஜின்பெயரும் பொறிக்கப்பட்டிருந்ததால் அதைக் கண்டு ஆத்திரமடைந்து சிலையை சேதப்படுத்தியதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.