தேர்தலை நிறுத்த ஜனாதிபதிக்கு கருணாநிதி அவசரக் கடிதம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதே போல ஜனாதிபதியிடம் திமுக எம்.பிக்களும் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தனர்.
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் நெருங்க நெருங்கதிடீரென ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் முளைத்தனர். இந்த போலி வாக்காளர்களை ஆளும் அதிமுக தான்சேர்த்துள்ளதாக திமுக புகார் கூற, திமுக தான் அதைச் செய்தது என அதிமுக பதிலுக்கு சண்டை போட தேர்தல்கமிஷன் விசாரணை நடத்தியது.
திடீர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது உண்மை தான் என்று நிரூபணமானதால் வாணியம்பாடி மற்றும்சைதாப்பேட்டை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.
ஆனால், ஆண்டிப்பட்டியிலும் கிட்டத்தட்ட 18,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இருந்தாலும் அங்கு தேர்தல் நடக்கிறது.
அங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் அதை தேர்தல் கமிஷன்கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன்முடிவெடுத்திருப்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
போலி வாக்காளர்களை நீக்காமல் அங்கு தேர்தலை நடத்தக் கூடாது. இது தொடர்பாக திமுக எம்.பிக்கள் கொடுத்தபுகாரையும் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதில் நீங்கள் தலையிட வேண்டும் எனக் கூறியுள்ளார்கருணாநிதி.
திமுக எம்.பிக்கள் மனு:
இந் நிலையில் திமுக எம்.பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணனை நேரில் சந்துத்துஆண்டிப்பட்டியில் தேர்தலை நிறுத்தக் கோரி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆண்டிப்பட்டியில் ஆயிரக்கணக்கான உண்மையான வாக்களர்களின் பெயர்களை பட்டியலில்இருந்து நீக்கிவிட்டு அதிமுகவினரை போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், எனவே அங்குதேர்தலை நிறுத்திவிட்டு பட்டியலை தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications