வாக்காளர் பட்டியல் குளறுபடி: வாணியம்பாடி தாசில்தார் டிரான்ஸ்பர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடிகளுக்குக் காரணமான வாணியம்பாடி தாசில்தார் இடமாற்றம்செய்யப்பட்டார். மேலும் ஒரு ஆசிரியை உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12ம் தேதி விசாரணை நடத்திய மத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ் இத்தொகுதியில் தயாரிக்கப்பட்டவாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார்.

இதையடுத்து இத்தொகுதியில் நடைபெறவிருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. குளறுபடிகளுக்குக்காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வாணியம்பாடி தாசில்தாரான நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாலாஜாபேட்டையில்கோட்டக் கலால் அலுவலராக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடிக்குக் காரணமான ஆசிரியை கவியரசி, மேற்பார்வையாளராக இருந்தவாணியம்பாடி நகராட்சி சர்வேயர் ராமமூர்த்தி ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட கலெக்டரான டாக்டர் ஆ.சி. மோகன்தாஸ் இந்த இடமாற்ற, சஸ்பெண்ட் உத்தரவுகளைப்பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+