திண்டிவனம் அருகே வேன்-லாரி மோதல்: 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே இன்று (திங்கள்கிழமை) காலை வேனும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து சென்னைக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
திண்டிவனத்தை அடுத்த பாஞ்சாலம் அருகே இந்த வேன் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, எதிரேவந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த லாரி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்குச்சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஒரு பெண் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications