கிருஷ்ணமூர்த்தியை நீக்கக் கோரி தேர்தல் கமிஷனுக்கு திமுக அவசர கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்த உத்தரவிட்ட தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு அவசர அவசரமாகதிமுக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளுக்கு தேர்தலை தள்ளிவைத்து விட்டு, ஆண்டிப்பட்டிக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த முறைகேடுகாரணமாக ஆண்டிப்பட்டியில் நேர்மையான தேர்தல் நடைபெறாது என்று தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

ஆண்டிப்பட்டியில் தேர்தலை நிறுத்தக் கோரி முதலில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு கருணாநிதி புகார் மனுஅனுப்பினார். பிறகு திமுக எம்.பி.க்கள் குழுவும் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து தேர்தலைநிறுத்தக் கோரி வலியுறுத்தின.

அதன் பிறகும் தேர்தலை தள்ளி வைக்காததால், திமுக தலைமை ஜனாதிபதிக்கு மனு அனுப்பியது. பிறகு வேறுவழியில்லாமல் திமுக தேர்தல் வேட்பாளரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.

இதற்கிடையே ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்றுதிமுக சந்தேகப்படுகிறது. திமுக அனுப்பிய மனுக்களை பரிசீலிக்காமலேயே அவர் முடிவு எடுத்து விட்டதாகவும்கருதுகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக இப்போது தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

இது குறித்து திமுக எம்.பி.க்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எந்தக் காரணங்களுக்காக இரு தொகுதி தேர்தலை தள்ளி வைக்கப்பட்டதோ, அதே புகார்கள் ஆண்டிப்பட்டியிலும்இருக்கின்றன. தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் பலர் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து, வாக்காளர்பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதை தகுந்த ஆதாரத்துடன் அவரிடம் அளித்தனர்.

ஆனால், தேர்தல் கமிஷன் பெஞ்ச் எங்களது கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. காரணம், பாரபட்சமற்ற வகையில்தனது மனதை செலுத்த தேர்தல் கமிஷனர் கிருஷ்ண மூர்த்தி தயாராக இல்லை. அவரிடம் எங்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதற்கு உரிய விளக்கத்தை அவர் எங்களுக்கு தரவில்லை. எனவே,ஒரே மாதிரியான அளவுகோலை மூன்று தொகுதிகளுக்கும் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

இல்லாவிட்டால், அரசியல் சாசனத்தின் 324(5) பிரிவின்படி தலைமை தேர்தல் கமிஷனர் தனக்குள்ள அதிகாரத்தைபயன்படுத்தி, தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை அந்த பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+