குமரியில் பிடிபட்ட வெளிநாட்டுப் பெண் உளவாளியா? - போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பிடிபட்டுள்ள ஒரு வெளிநாட்டு பெண் உளவாளியா என்பது குறித்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் நாடாளுமன்றம் தீவிரவாதிகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப்போடப்பட்டு, போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் முக்கியஇடங்களுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியிலும் போலீசார் இரவுப்பகலாக ரோந்து சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் குமரிமுனை அருகே காணிமடம் கடற்கரைப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு வெளிநாட்டுப்பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண்ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மரியா சத்தியனந்தா என்று தெரிய வந்தது.
கடந்த மாதம் 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்த மரியா, மராட்டிய மாநிலம் நாண்டிக் ரயில்நிலையத்தில் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை தவற விட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை எந்த போலீஸ் நிலையத்திலும் இது வரை அவர் புகார் கொடுக்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக இவர் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாஸ்போர்ட், விசா இல்லாமலேயேதங்கி உள்ளார். இந்தியாவில் அனுமதியில்லாமல் தங்கியிருந்ததால் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணைநடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம்ஏற்பட்டள்ளது.
அந்தப் பெண் உளவாளியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே, க்யூ பிராஞ்ச் போலீசாரும்அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.