For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளின் போர் நிறுத்தம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகள் தங்களுடைய போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளனர்.

இலங்கை அரசும் நார்வே தூதுக் குழுவினரும் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு வசதியாகபோர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

முதற்கட்டமாக கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்து ஒரு மாத காலப் போர் நிறுத்தத்திற்கு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து இலங்கை ராணுவமும் ஒரு மாத காலப் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.

இதற்கிடையே இலங்கை அரசும் நார்வே குழுவினரும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தை நார்வே குழுவினர் பலமுறை சந்தித்துப்பேசியுள்ளனர்.

அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புக்கள் படிப்படியாக அதிகரித்துள்ளன என்று நார்வே குழுவினர் நம்பிக்கைதெரிவித்தனர். ஆனால் இரு தரப்பினரும் ஏராளமான இடையூறுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும்அவர்கள் கூறினர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேலும் துரிதப் படுத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள்போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் உள்ள சென்னை அல்லது பெங்களூரில் பேச்சுவார்த்தையை நடத்த அனுமதியளிக்க வேண்டும்என்று விடுதலைப் புலிகள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ராணுவமும் போர்நிறுத்த நீட்டிப்பு:

இதற்கிடையே விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த நீட்டிப்பை வரவேற்ற இலங்கை அரசு, தாங்களும்போர்நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 24ம் தேதி வரை இந்தப் போர்நிறுத்த நீட்டிப்பு அமலில் இருக்கும் என்று இலங்கை ராணுவம்அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X