ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் வைகை சேகர்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக வைகை சேகர் போட்டியிடுவார் என்றும் அவர் வரும் 23ம் தேதிவேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடந்த வாக்காளர் குளறுபடியால் அங்கு முறையான தேர்தல் நடக்காது என்று கூறிகாங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லைஎன்று அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் பெயரை கருணாநிதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
வைகை சேகர் என்கிற பாலசுந்தரம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார். ஆண்டிப்பட்டி ஒன்றிய திமுகசெயலாளரான இவருக்கு வயது 38.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதிமுக சார்பாக இதே தொகுதியில் நின்று சுமார் 18 ஆயிரம் வாக்குகளைப்பெற்றுள்ளார்.
பி.ஏ. பட்டதாரியான வைகை சேகர், வரும் 23ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications