திமுகவுக்கு ஆதரவளிக்க காங்., தமாகாவுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிரான ஓட்டுக்களைத் திரட்டுவதற்காக காங்கிரஸ், தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளதால், ஜெயலலிதாவுக்கு எதிராக எப்படியாவதுவாக்குகளைத் திரட்ட வேண்டும் என்று அக்கட்சி கருதியுள்ளது.
ஏற்கனவே மதிமுகவும் வேட்பாளரை அறிவித்துள்ளதால், ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறவாய்ப்புள்ளது. ஆனால் காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்டுக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளதால்,அக்கட்சியின் ஆதரவைப் பெற்றால் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக திமுக கருதுகிறது.
எனவே அக்கட்சிகளுக்கு கருணாநிதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அழைப்பு விடுத்துள்ளார். திமுகவேட்பாளர் வைகை சேகரை ஆதரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு சம்மதித்து அக்கட்சிகள் அறிவிப்பு செய்தால் திமுக வேட்பாளரே பொது வேட்பாளராக கருதப்படுவார்.மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள் ஒட்டு மொத்தமாக திமுகவுக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
ஆனால் அக்கட்சிகளின் ஆதரவு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications