For Daily Alerts
Just In
திமுகவுக்கு மறைமுக ஆதரவு: தமாகா, கம்யூனிஸ்ட் மீது வாழப்பாடி பாய்ச்சல்
சென்னை:
திமுகவை ஆதரிப்பதற்காகவே தமாகாவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்துள்ளன என்று தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி சென்னையில் அவர் இன்று (திங்கட்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளன. இவர்கள் திமுகவை மறைமுகமாகஆதரிப்பதற்காகவே இவ்வாறு அறிவித்துள்ளனர்.
வரும் 23ம் தேதி டெல்லி சென்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை சோனியா மற்றும் ரமேஷ் சென்னிதாலாதலைமையில் காங்கிரஸில் இணைக்க உள்ளேன். இதை காங்கிரசில் உள்ள அனைத்துத் தலைவர்களும்வரவேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காங்கிரசில் யார் தலைமையிலிருந்தாலும் அவர்கள் கீழ் பணியாற்ற நான் எப்போதும் தயாராகவேஉள்ளேன் என்று வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
Comments
Story first published: Monday, January 21, 2002, 5:30 [IST]