கொழும்பு பயணியிடம் 2.5 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லவிருந்த பயணியிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று இச் சம்பவம் நடந்துள்ளது. பிடிபட்டவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து இப் பிரிவின் மண்டல இயக்குனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜாபர் அலி என்ற 38 வயது நபர் இரண்டரை கிலோ எடையுள்ள ஹெராயினைக் கடத்த முயன்றார். இது குறித்துஎங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து அவரை இமிக்ரேஷன் கவுண்டரிலேயே மடக்கிப் பிடித்தோம்.
அவரது ரெக்சின் பைகளை சோதனையிட்டபோது பைகளின் அடிப்பகுதியில் ஹெராயினை மறைத்துவைத்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னையைச் சேர்ந்த ஒருவர் இதை தன்னிடம் தந்துகொழும்புவுக்குக் கொண்டு செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்தார்.
இரு மாதங்களுக்கு முன் இதே போல ஹெராயினை கொழும்புவுக்குக் கடத்திச் சென்றதாகவும் கூறினார்.
70 சதவீதம் சுத்தப்படுத்தப்பட்டிருந்த அந்த ஹெராயினின் மதிப்பு சர்வதேச மார்க்கெட்டில் ரூ. 2.5 கோடியாகும்.இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரமாகிவிட்டதால், இப்போது விமானம் மூலம் போதைப் பொருளை கடத்தஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து விமான நிலையங்களிலும் இனி கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றார்ஜிவால்.












Click it and Unblock the Notifications