கொலை முயற்சி வழக்கில் ஜான் பாண்டியன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பணத்தகராறு தொடர்பாக ஒருவரைக் கடத்திக் கொலை செய்ய முயற்சித்ததாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகதலைவர் ஜான் பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய்க்கும், அவரது பங்குதாரர் முருகனுக்கும் இடையே ரூ.3.5 லட்சம்பணத்தகராறு இருந்து வந்தது. இதில் முருகனுக்கு ஆதரவாக ஜான் பாண்டியன் தலையிட்டுள்ளார்.

அஜயையும், அவரது மேனேஜரையும் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டதோடு மேனேஜர் சுனிலை கத்தியால்குத்தியதாக ஜான் பாண்டியன் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இது தொடர்பாக ஜான் பாண்டியனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார்கைது செய்தனர்.

பிறகு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட ஜான் பாண்டியன், தற்போது சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.

ஜான்பாண்டியன் மீது கொலை முயற்சி உட்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+