கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தகவல் மையத்தின் மீது தீவிரவாதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலைதிடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த 4 போலீசார் கொல்லப்பட்டனர்.
கொல்கத்தாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் பார்க் தெருவில் அமெரிக்கத்தகவல் மையம் உள்ளது.
சமீப காலமாக இந்த மையத்துக்கு மிக பலத்த காவல் போடப்பட்டுள்ளது. இரவில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்காலையில் காவல் பணியை மேற்கொள்ள இருந்த போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைப்பற்காக வரிசையில்நின்றிருந்தனர்.
காலை 6.30 மணிக்கு இந்தப் பணி நடந்து கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4தீவிரவாதிகள் திடீரென்று ஏ.கே.47 ரக துப்பாக்கிகளாால் போலீசார் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் 18 போலீசார் மீது குண்டுகள் பாய்ந்தன. போலீசார் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் அவர்கள் மோட்டார்சைக்கிளிலேயே தப்பியோடிவிட்டனர்.
இத் தாக்குதலில் 4 போலீசார் அந்த இடத்திலேயே இறந்தனர். 14 போலீசார் மிக பலத்த காயமடைந்தனர்.அமெரிக்க மையத்தின் பாதுகாவலர் உள்பட சில பொது மக்களும் இதில் காயமடைந்தனர். இதில் பலரது நிலைமைமிக மோசமாக உள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திடீர் தாக்குதலால் நிலை குலைந்த போலீசார் அங்குமிங்கும் ஓடினர். பலர் அங்கு நின்றிருந்த போலீஸ் வேனின்பின்னால் போய் மறைந்து கொண்டதால் உயிர் தப்பினர். கிட்டத்தட்ட 54 தோட்டக்கள் அங்கு சிதறிக் கிடந்தன.
குடியரசுத் தினத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அமெரிக்கத் தகவல் மையத்தில் தீவிரவாதிகள்நடத்திய தாக்குதல் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறையான எப்.பி.ஐயின் இயக்குநர் ராபர்ட் முல்லர் இன்று இந்தியா வந்துள்ளார். அவர்தீவிரவாதத்துக்கு எதிராக இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடனும், பிரதமர், உள்துறை அமைச்சருடனும்விவாதிக்க உள்ளார். அவரது வருகைக்கு எதிராகவும் இத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications