10 போர்க் கைதிகளை விடுதலை செய்த புலிகள்
கொழும்பு:
போரின்போது கைது செய்யப்பட்ட 10 இலங்கைக் கைதிகளை விடுதலைப் புலிகள் விடுதலை செய்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 3 பேர் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் விடுதலைப் புலிகளிடம் மாட்டிக் கொண்டனர்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த 10 போர்க் கைதிகளையும் விடுவிக்க விடுதலைப் புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்டதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வன்கூறினார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் அந்த 10 போர்க் கைதிகள் இருந்தபோது, அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டதாகஇலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இதையடுத்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யவும் பிரபாகரன்விரும்புவதாகவும் அப்பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இலங்கைப் போரில் காணாமல் போன ராணுவத்தினரின் குடும்பங்கள் இணைந்து ஒரு சங்கம் ஏற்கனவே உள்ளது.இந்தச் சங்கத்திடம் 10 போர்க் கைதிகளும் ஒப்படைக்கப்பட்டனர்.
போரின்போது காணாமல் போன நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் இன்னும் உயிருடன்இருப்பதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளிடம் கைதிகளாக இருப்பதாகவும் அவர்களுடைய குடும்பத்தினர்இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அனைவரையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி கோரிக்கை விடுத்துக்கொண்டே உள்ளனர்.
புலிகள் மீதான தடையை நீக்க புத்த மதகுரு வேண்டுகோள்:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று புத்த மதகுருகோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவிதமான முன் நிபந்தனையும் இல்லாமல் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால், அவர்கள்மீதான தடையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழர் வாழும் பகுதிகளுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்என்றும் அவர் கோரியுள்ளார்.