10 போர்க் கைதிகளை விடுதலை செய்த புலிகள்
கொழும்பு:
போரின்போது கைது செய்யப்பட்ட 10 இலங்கைக் கைதிகளை விடுதலைப் புலிகள் விடுதலை செய்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 3 பேர் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் விடுதலைப் புலிகளிடம் மாட்டிக் கொண்டனர்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த 10 போர்க் கைதிகளையும் விடுவிக்க விடுதலைப் புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்டதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வன்கூறினார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் அந்த 10 போர்க் கைதிகள் இருந்தபோது, அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டதாகஇலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இதையடுத்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யவும் பிரபாகரன்விரும்புவதாகவும் அப்பத்திரிக்கைகள் கூறியுள்ளன.
இலங்கைப் போரில் காணாமல் போன ராணுவத்தினரின் குடும்பங்கள் இணைந்து ஒரு சங்கம் ஏற்கனவே உள்ளது.இந்தச் சங்கத்திடம் 10 போர்க் கைதிகளும் ஒப்படைக்கப்பட்டனர்.
போரின்போது காணாமல் போன நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் இன்னும் உயிருடன்இருப்பதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளிடம் கைதிகளாக இருப்பதாகவும் அவர்களுடைய குடும்பத்தினர்இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அனைவரையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி கோரிக்கை விடுத்துக்கொண்டே உள்ளனர்.
புலிகள் மீதான தடையை நீக்க புத்த மதகுரு வேண்டுகோள்:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று புத்த மதகுருகோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவிதமான முன் நிபந்தனையும் இல்லாமல் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால், அவர்கள்மீதான தடையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழர் வாழும் பகுதிகளுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்என்றும் அவர் கோரியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications