மண்ணில் புதைந்த சாலை: புதுவையில் பரபரப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அதிக வாகனங்கள் சென்றதால் முக்கிய சாலையொன்றின் ஒரு பகுதி, பாரம் தாங்காமல் பூமிக்குள்புதைந்து விட்டது.
பாண்டிச்சேரியின் முக்கிய சாலை மிஷன் சாலையாகும். இந்த சாலையில் எப்போதும் கடுமையான போக்குவரத்துஇருக்கும். அதிக அளவில் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கும்.
சமீபகாலமாக இந்த சாலையின் சில பகுதிகள் திடீரென தரைக்குள் புதைந்து வருவது சகஜமாகி விட்டது. சாலையில்அதிக அளவில் வாகனங்கள் செல்வதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும் முத்துக்குமரன் கோவில் தெருஆகியவற்றிற்கு இடையே உள்ள சாலை 3 அடி அளவுக்கு தரைக்குள் புதைந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதைந்த சாலைப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். பொதுப்பணித்துறைசெயற் பொறியாளர் ஆனந்தனே இதுகுறித்துக் கூறுகையில், கடலுக்கு அருகில் இந்த சாலை உள்ளது.
மேலும் சாலைக்குக் கீழே 1978ம் ஆண்டு போடப்பட்ட கழிவு நீர்க் குழாய் செல்கிறது. இது தற்போதுஉபயோகத்தில் இல்லை. ஆனால் குழாய் போட்டு நீண்ட காலமாவதால், அது துருப்பிடித்து மண்ணின் தன்மையைமாற்றியுள்ளது.
இதன் காரணமாக சாலையின் பலம் குறைந்துள்ளது. இதுவே சாலை புதையக் காரணம். உடனடியாக இந்தக் கழிவுநீர்க் குழாயை அகற்ற பாண்டிச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனந்தனே கூறியுள்ளார்.