ஆபாசப் படங்களில் நடித்த மற்றொரு டிரைவர் கைது
சென்னை:
"செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் முழு விபரத்தையும் தெரிந்த அவரது டிரைவர் விஜயனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பெண்கள், இளைஞர்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் உலாவ விட்டு கோடிக்கணக்கில்சம்பாதித்த டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
அவரது படத்தில் நடித்திருக்கும் பலரை கைது செய்து அவருக்கு எதிராக வாக்குமூலம் வாங்கும் முயற்சியில்போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரைப்பற்றிய அத்தனை ரகசியங்களையும் அறிந்த அவரது கார் டிரைவர் விஜயனை கடந்ததிங்கட்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர்.
இவர் கடந்த 8 வருடங்களாக பிரகாஷின் டிரைவராக வேலை செய்துள்ளார். இவர் போலீசாரிடம் கூறியதாவது:
நான் டாக்டரிடம் கார் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவருடன் வரும் பெண்களைப் பார்க்கும்போதுஎனக்கும் அவர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
ஒரு நாள் டாக்டர் போதையில் இருக்கும் போது இதைப்பற்றி அவரிடம் கூறினேன். உடனே அவர் என்னை ஒருபெண்ணோடு உல்லாசமாக இருக்க அனுமதித்தார். பிறகு ஆபாசப் படத்தில் நடித்தால் பணம் தருவதாகவும்என்னிடம் கூறினார்.
பணத்துக்கு பணமும், சுகத்துக்கு சுகமும் கிடைத்ததால் நான் மகிழ்ச்சியோடு நடித்தேன். ஆரம்பத்தில் என்னைஒன்றிரண்டு பெண்களோடு மட்டும் நடிக்க வைத்தார்.
சில நாட்கள் கழித்து ஐந்தாறு பெண்களுடன் நடிக்க வைத்தார். புதிதாக வந்த பல பெண்களை நான்அனுபவித்துள்ளேன் என்று விஜயன் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றக் காவல் முடிவடைந்து, பிரகாஷை மீண்டும் சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் 5ம் தேதி வரை அவருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்துநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் பிரகாஷ் மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications