ஆண்டிப்பட்டியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் ஜெ.
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை (வியாழக்கிழமை)வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
ஆண்டிப்பட்டியில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயலலிதா நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர்கள் யாரும் உடன் வர வேண்டாம் என்று ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மனுத்தாக்கல் இருக்க வேண்டும் என்றும், வாகனங்களின்அணிவகுப்பும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்து முடித்தவுடன் சென்னைக்குத் திரும்புகிறார். பின்னர் பிப்ரவரி 5ம்தேதியிலுருந்து 12ம் தேதி வரை ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வைகை சேகர், மதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயச்சந்திரன்ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.
முதல்வர் ஆண்டிப்பட்டிக்கு வருகை:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்வதை முன்னிட்டு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்இன்று தேனி செல்கிறார்.
முன்னதாக இன்று காலை மதுரை சென்ற பன்னீர்செல்வம், அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு, பின்னர் கார்மூலம் தேனி செல்கிறார் பன்னீர்செல்வம்.
நாளை காலை வேட்புமனுத் தாக்கலுக்காக வரும் ஜெயலலிதாவை காலை 10.30 மணிக்கு தேனி மாவட்டஎல்லையிலேயே வரவேற்கவும் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications