For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் ஹோட்டல் வழக்கு: ஜெ., பன்னீருக்கு நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லண்டன் ஹோட்டல் வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டன் ஹோட்டல் வழக்கு மற்றும் வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக எம்.பியானகுப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குப்புசாமி கூறியுள்ளதாவது:

ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை தனி நீதிமன்றத்தில்நடத்த தனிப்பட்ட சிறப்பு அரசு வக்கீலை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த இரண்டு வழக்குகளையும் மத்திய அரசின் உள்துறையிடமோ அல்லது தனிப்பட்ட ஏஜன்சியிடமோஒப்படைக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் குப்புசாமி கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச்சில் நடந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.

இன்னும் 2 வாரத்திற்குள் அவர்கள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X