சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தீவிரப் பாதுகாப்பு
சென்னை:
கொல்கத்தாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளதையடுத்து சென்னையில் இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட்அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு 24 மணிநேரப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்துஇந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வருகிற 25ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கலந்து கொள்ளும் 3வது ஒருநாள்சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதையடுத்து சென்னை நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளஎம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 3000 போலீஸார் கொண்ட படை பாதுகாப்பில் ஈடுபடவுள்ளது.
மேலும், போட்டி முடியும் வரை 24 மணி நேர பாதுகாப்புக்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டி நடக்கும் தினத்தில் ஸ்டேடியத்திற்குள் வெடிகள், பேனர்கள், டப்பாக்கள், இசைக் கருவிகள்,சிகரட் லைட்டர்கள், செல் போன்கள், தீப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளிலும் போலீசார் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளனர். பகல்-இரவுப்போட்டியாக இந்த கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது.
இதேபோல, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வழக்கத்தை விட கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர தூதரகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications