For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் சரணடையத் திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

மாதேஸ்வரன் மலையில் சந்தனக் கடத்தல் வீரப்பன் சரண் அடைய திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்துஅதிரடிப் படையினர் அங்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட வீரப்பன் காட்டுப் பகுதிகளில் மறைந்து வாழ்ந்துவருகிறான். இவனைப் பிடிக்க இரண்டு மாநில அரசுகளும் அதிரடிப்படை அமைத்து காடுகளில் தேடி வருகின்றனர்.

இரு மாநில அதிரடிப்படைகளும் முன்னாள் தமிழக டி.ஜி.பியான தேவாரம் தலைமையில் கூட்டாக வீரப்பனைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இன்னும் ஒரு மாதத்தில் வீரப்பனை உயிரோடு பிடிப்போம் அல்லது சரண் அடைய செய்வோம் என்று தேவாரம்பதவி ஏற்றதிலிருந்தே கூறி வருகிறார்.

இந்த நிலையில் வீரப்பன் மாதேஸ்வரன் மலைப்பகுதி அல்லது பாலாறு பகுதியில் சரண் அடையப் போவதாகபோலீசாருக்கும் அதிரடிப் படையினருக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடிப் படையினரும் போலீசாரும் மாதேஸ்வரன் மலைக்கு விரைந்துள்ளனர். அங்கு வீரப்பனிடம்இருந்து தகவல் வருமா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு பகுதியிலும் அதிரடிப் படையினர் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பியான சுபாஷ் பரணி, வீரப்பன் சரணடைவதாக எந்த தகவலும் எனக்குஇது வரை வரவில்லை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X