சென்னையில் நாளை ஒருநாள் கிரிக்கெட்: தீவிர பாதுகாப்பு
சென்னை:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே நாளை (வெள்ளிக்கிழமை) 3வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்போட்டி நடைபெறவுள்ளதையடுத்து, சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் தாஜ் கோரமண்டல்ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துசென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பு பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளதாக தமிழக கிரிக்கெட் சங்கச் செயலாளர் அஷோக் கும்பட் கூறினார்.
பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரையும், பின்னர் மாலை 6.45 மணிக்குத் தொடங்கி இரவு 10.15 மணி வரையும் நடக்கும்.
ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் நாளை பகல் 12 மணியிலிருந்துதான் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கடந்த வாரம் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்த ஸ்டேடியத்தில்மொத்தம் 46,000 இருக்கைகள் உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான டி.வி. திரை ஒன்று புதிதாகஅமைக்கப்பட்டுள்ளது. போட்டியின் முக்கியக் காட்சிகள் இந்த திரை மூலம் ரசிகர்களுக்காகக் காண்பிக்கப்படும்.
இதைத் தவிர நூற்றுக்கணக்கான டெலிவிஷன் பெட்டிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 போட்டிகளிலும் இந்திய-இங்கிலாந்து அணியினர் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications