சென்னையில் நாளை ஒருநாள் கிரிக்கெட்: தீவிர பாதுகாப்பு
சென்னை:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே நாளை (வெள்ளிக்கிழமை) 3வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்போட்டி நடைபெறவுள்ளதையடுத்து, சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் தாஜ் கோரமண்டல்ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துசென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பு பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளதாக தமிழக கிரிக்கெட் சங்கச் செயலாளர் அஷோக் கும்பட் கூறினார்.
பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரையும், பின்னர் மாலை 6.45 மணிக்குத் தொடங்கி இரவு 10.15 மணி வரையும் நடக்கும்.
ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் நாளை பகல் 12 மணியிலிருந்துதான் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கடந்த வாரம் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்த ஸ்டேடியத்தில்மொத்தம் 46,000 இருக்கைகள் உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான டி.வி. திரை ஒன்று புதிதாகஅமைக்கப்பட்டுள்ளது. போட்டியின் முக்கியக் காட்சிகள் இந்த திரை மூலம் ரசிகர்களுக்காகக் காண்பிக்கப்படும்.
இதைத் தவிர நூற்றுக்கணக்கான டெலிவிஷன் பெட்டிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 போட்டிகளிலும் இந்திய-இங்கிலாந்து அணியினர் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications