ஜெ.வை எதிர்த்து கிருஷ்ணசாமி மனுத் தாக்கல்
ஆண்டிப்பட்டி:
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று பிற்பகலில்வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் வைகை சேகரும், மதிமுக சார்பில் ஜெயச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.இவர்கள் நேற்றே வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டனர். இவர்கள் இருவரும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து தலித் கட்சியான புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமியும்போட்டியிடுகிறார். அவர் இன்று மாலையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்தத் தொகுதியில் தலித் மக்களும் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுக்களை கிருஷ்ணசாமி குறிவைப்பார்.
மாஞ்சோலைத் தொழிலாளி கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமிஇப்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ஆண்டிப்பட்டியில் போட்டியிடவும் இதற்காக வேட்பு மனுத் தாக்கல்செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அனுமதி வாங்கியுள்ளார்.
இன்று மாலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அங்கி தங்கியிருந்து பிரச்சாரம் செய்யவும் அவருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இன்று ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது தேனி நகரமே அமளிதுமளிப்பட்டது. பாதுகாப்புஎன்ற பெயரில் மதுரை-தேனி இடையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால்,மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசு இந்திரமும் அதிகாரிகாரிகளும் முறைகேடான வகையில்பயன்படுத்தப்பட்டு வருவதாக அனைத்து எதிர் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.
ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் 18,000 போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாகக் கூறிஇந்தத் தேர்தலை காங்கிரஸ், த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவைபுறக்கணித்துள்ளன.
சமீப காலத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆனால், ஜெயலலிதாவை எதிர்த்து நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் தான் இக் கட்சிகள் தேர்தலைப்புறக்கணிப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.