காங்கிரசில் இணைந்தார் வாழப்பாடி
டெல்லி:
தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா ஆகியோர் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அக்கட்சியில் இணைந்தார் வாழப்பாடி.
அவருடன் தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் காங்கிரசில் இணைந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் வாழப்பாடி பேசியதாவது:
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அரியணையைக் கைப்பற்றுவதற்கான முதல் முயற்சியாகத்தான் நான்மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளேன்.
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்னைப் போலவே மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பி வந்துகட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
வட மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தலுக்குப் பிறகு அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமடையும்வகையில் தமிழகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
அப்போது சோனியா காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார்வாழப்பாடி.
இன்று மகிழ்ச்சிகரமான நாள்: இளங்கோவன்
பின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் இன்று ஒரு மகிழ்ச்சிகரமான நாள்என்றார்.
தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது என்ற இளங்கோவன், தமிழகத்தில் விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சோனியாகாந்தி முன்னிலையில் நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டோம் என்றும் கூறினார்.