ஆப்கானிஸ்தானுக்கு புதிய இந்திய தூதுர்
டெல்லி:
ஆப்கானிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதராக விவேக் கத்ஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் நடவடிக்கையினால் தலிபான்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கர்சாய் தலைமையிலானஇடைக்கால அரசு உருவாகியுள்ளது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளையும் அளித்துக் கொண்டுவருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே எஸ்.கே. லம்பா சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதரை மத்திய அரசு நேற்று நியமித்தது. தற்போது மியான்மர் நாட்டுஇந்தியத் தூதரான விவேக் கத்ஜூ, இனி ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதராகச் செயல்படுவார். இவர்விரைவில் ஆப்கானிஸ்தான் சென்று தன்னுடைய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டு ஐ.எப்.எஸ். பயிற்சி பெற்ற விவேக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியநாடுகளின் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்டபோது,பயணிகளை மீட்க தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய தூதுக்குழுவின் தலைவராக விவேக்இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.