இலங்கை: தமிழர் பகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பு
கொழும்பு:
தமிழ் கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோளுக்கிணங்க தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும்கிழக்குப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கைப் பகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு இந்த தேர்தல் தடங்கலாக இருக்கும்என்று தமிழ் கட்சிகள் கருதுகின்றன.
இதனால் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, மற்றும் முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீமுடன் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தின.
அப்போது இந்தப் பகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள திகமதுல்லா பகுதியில்மட்டுமாவது தேர்தலை நடத்த வேண்டும் என்று ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து விக்கிரமசிங்கே கேட்டுக் கொண்டதையடுத்து, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில்உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது.
ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் திகமதுல்லா பகுதியில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும்தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications