For Quick Alerts
For Daily Alerts
Just In
மொழிப் போர் தியாகிகள் தினம்: சென்னையில் மதிமுக ஊர்வலம்
சென்னை:
மொழிப் போர் தியாகிகள் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில்அக்கட்சித் தொண்டர்கள் சென்னையில் ஊர்வலம் நடத்தினர்.
அந்நிய மொழி தமிழகத்தில் ஊடுருவமால் தடுக்க போராட்டம் நடத்தி உயிர் நீத்த தியாகிகள் நினைவு தினம்மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் இன்று சென்னையில் மவுன ஊர்வலம் சென்றனர்.
பிறகு மொழிப் போர் தியாகிகளின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் வைகோ.
Story first published: Friday, January 25, 2002, 5:30 [IST]