For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஊடுருவிய 15 பாகிஸ்தான் தீவிரவாதிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 15 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்றிரவு விடிய, விடிய தேடுதல்வேட்டை நடத்தினர். தொடர்ந்து இந்த தேடுதல் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் 15 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், அதில் ஒரு தீவிரவாதி வேலூர் மாவட்டத்திற்குவந்திருப்பதாகவும், மத்திய புலனாய்வுத்துறை மூலம் தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சென்னை ஐ.ஜி. உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களிலும், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை செய்துவருகின்றனர்.

தமிழகத்தில் நுழைந்து வெளியில் தெரிந்துவிட்டதால் இந்தத் தீவிரவாதிகள் பெங்களூருக்குத் தப்பிச் செல்லவும்வாய்ப்புள்ளதால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தியும் போலீசார்சோதனைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 முதல் 11 மணி வரை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலும், பிறகு ஏலகிரி மலைக்குச் சென்றுஅங்குள்ள லாட்ஜ்களில் வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் சோதனை நடத்தினார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X