திண்டுக்கல், நெல்லையில் பஸ்களை எரித்த 5 பேர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் சமீபத்தில் பஸ்களை எரித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லிலிருந்து செந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த டவுண் பஸ்சை ஒருகும்பல் வழிமறித்து, தீவைத்துவிட்டுச் சென்றனர்.
இதனால் அந்த பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீவைத்த கும்பலைத் தேடுவதற்காக தனிப் போலீஸ் படைஅமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்று கொண்டிருந்த ஒரு மாருதிகாரை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்தக் காரில் வந்த 3 பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள்தான் திண்டுக்கல் பஸ்சை எரித்தவர்கள்என்பது தெரிய வந்தது.
தங்கள் தலைவரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனைக் கைது செய்ததன்காரணமாகத்தான் தாங்கள் பஸ்சை எரித்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை பஸ்சை எரித்த 2 பேர் கைது:
இதே போல் நெல்லை அருகே பஸ்சை எரித்த 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் தொடர்புடைய மேலும் பலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.