திண்டுக்கல், நெல்லையில் பஸ்களை எரித்த 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் சமீபத்தில் பஸ்களை எரித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லிலிருந்து செந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த டவுண் பஸ்சை ஒருகும்பல் வழிமறித்து, தீவைத்துவிட்டுச் சென்றனர்.

இதனால் அந்த பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீவைத்த கும்பலைத் தேடுவதற்காக தனிப் போலீஸ் படைஅமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்று கொண்டிருந்த ஒரு மாருதிகாரை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்தக் காரில் வந்த 3 பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள்தான் திண்டுக்கல் பஸ்சை எரித்தவர்கள்என்பது தெரிய வந்தது.

தங்கள் தலைவரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனைக் கைது செய்ததன்காரணமாகத்தான் தாங்கள் பஸ்சை எரித்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

நெல்லை பஸ்சை எரித்த 2 பேர் கைது:

இதே போல் நெல்லை அருகே பஸ்சை எரித்த 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் தொடர்புடைய மேலும் பலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+