For Daily Alerts
Just In
கொல்கத்தா தாக்குதல்: போலீஸ் அதிகாரி கைது
பாட்னா:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தாக்குதல் நடத்தியதில் முக்கியக் குற்றவாளியான ஆப்தாப் அன்சாரிஎன்ற பர்ஹான் மாலிக்குக்கு உதவியதாக ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பீகாரில் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் கடத்தப்பட்டபோதே மாலிக்குக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவுசெய்துவிட்டனர்.
ஆனால் அதைச் சரி பார்க்காமலேயே அவனுக்குப் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று கூறி ராம் ராஜ் கையெழுத்துப்போட்டுள்ளார்.
ஆனால் போலீசார் விசாரணையின்போது, தன்னுடைய கையெழுத்தை வேறு யாரோ போட்டுள்ளனர் என்று ராம்ராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் பல போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
மாலிக்குக்கு எதிராக ஏற்கனவே சர்வதேச போலீசான இன்டர்போல் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Sunday, January 28, 2001, 5:30 [IST]