தீவிரவாதிகள் ஒப்படைப்பா? - முஷாரப் ஆலோசனை
இஸ்லாமாபாத்:
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் 31ம்தேதி ராணுவ அதிகாரிகளுடன் கூடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் முஷாரப் இதுவரை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த 20 தீவிரவாதிகளையும் ஒப்படைப்பது குறித்து ராணுவ அதிகாரிகளுடன் முஷாரப் வரும் 31ம்தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை, நாட்டின் பாதுகாப்பு, ராணுவத்தின் நிலை ஆகியவை பற்றி ஆலோசிக்கஇருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளில் 14 தீவிரவாதிகளை ஒப்படைப்பது பற்றி முக்கிய முடிவுஎடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் 5 முக்கியத் தலைவர்களை ஒப்படைப்பது குறித்தும் விவாதிக்கப்படஉள்ளது.












Click it and Unblock the Notifications